Rs.2,634.00
இந்துமதத் தத்துவத்தில், அனைத்து மனிதர்களும் அடைய முயற்சிக்கின்ற நான்கு இலக்குகள் உள்ளன: நல்லொழுக்கம், செழிப்பு, அன்பு, மற்றும் மோட்சம். இவை நான்கு புருடார்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கிகய் எனும் ஜப்பானியக் கருத்தாக்கத்தின் மூலம், உலகெங்குமுள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு உதவியுள்ள இந்நூலாசிரியர்கள், சமச்சீரானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வழிமுறையைக் காட்டுகின்ற, புராதன ஞானமான நான்கு புருடார்த்தங்களை இந்நூலில் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். நீங்கள் பயம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு, கூடுதல் ஆற்றலுடன் வாழ்வதற்கு இது உங்களுக்கு உதவும். அந்த நான்கு புருடார்த்தங்களைச் சீராகக் கடைபிடிப்பதன் மூலம், உத்வேகம், அழகு, அமைதி, அர்த்தம் ஆகியவை பொங்கி வழிகின்ற ஒரு வாழ்க்கையை நீங்கள் உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம்