• Rs.1,785.00

    உணர்வால் முடியும்: இட்லியாக இருங்கள் 4

    வாழ்வில் வெற்றிபெற எது அவசியம்? உங்களுக்குப் பல திறமைகள் இருக்கலாம். நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகிய வற்றை அடைவதற்குத் திறமையும் அறிவும் மட்டும் போதாது என்கின்றனர் அறிஞர்கள். தொழிலில் வெற்றிகளைக் குவித்த பலர், சொந்த வாழ்க்கையில் சோதனைகளை அனுபவிப்பதை அறிந்திருப்பீர்கள். செல்வங்களைக் குவித்த பணக்காரர்கள் நிம்மதியில்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள்.

    திறமை, பணம், புகழ் என எல்லாம் இருந்தும் அவர்களின் நிம்மதியற்ற வாழ்வுக்குக் காரணம் என்ன? உணர்வுகளைக் கையாளும் திறன் இல்லாதது.உணர்வுகள் நமக்குள் இருக்கும் மிகப்பெரிய சக்தி. அதனைப் பயன்படுத்தி நாம் வாழ்வை எப்படி மேம்படுத்துவது எனச் சொல்கிறது இந்தப் புத்தகம். நம் உணர்வுகள் எத்தகையது, அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்போது கட்டுப்படுத்த வேண்டும் எனப் பல உளவியல் விஷயங்களை எளிய உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சுருக்கமாகச் சொன்னால், உணர்வைக் கொண்டு உலகை வெல்லும் உத்தியைச் சொல்லித் தருகிறார்

  • Rs.1,750.00

    எமோஷனல் இன்டெலிஜென்ஸ்2.0

    ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் – எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே. உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது. தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி. சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது

  • Rs.1,225.00

    பணம் சில ரகசியங்கள்

    எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது

  • Rs.1,190.00

    பணமே ஓடி வா

    சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தம்தான் ‘பணமே ஓடி வா’.‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது

  • Rs.1,750.00

    தொட்டதெல்லாம் பொன்னாகும்

    நீங்கள் தொடங்கும் வியாபாரம் எதுவானாலும் அதில் மிகப்பெரிய வெற்றி பெறுவது எப்படி? இது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை. உழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது! மிகச் சிறிய அளவில் வியாபாரம் தொடங்குவோர் முதல் மிகப்பெரிய வியாபார நிறுவனமாக நடத்துவோர் வரை அனைத்துத் தரப்பினருக்குமான மிக எளிய வெற்றிக் கையேடு இது

  • Rs.1,650.00

    அள்ள அள்ளப் பணம் 9

    லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப் பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி

  • Rs.1,650.00

    அள்ள அள்ளப் பணம் 8 – இன்சூரன்ஸ்

    புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டுவது? இவற்றையெல்லாம் முன்கூட்டியே யூகித்து, முன்னெச்சரிக்கையோடு திட்டங்கள் வகுப்பது சாத்தியமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதும் அவற்றுக்கான விடைகளைத் தயாராக வைத்துக்கொள்வதும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதவை மட்டுமல்ல, தவிர்க்கக்கூடாதவையும்கூட. பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் ஆகியவை பெறும் கவனத்தை காப்பீடு பொதுவாகப் பெறுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரேகூட காப்பீடு பற்றி மிகவும் மேலோட்டமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையை மாற்றுவதே இந்நூலின் நோக்கம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று தொடங்கி அதிகம் அறியப்படாத பயணக் காப்பீடு, விபத்துக் காப்பீடு என்று பலவகையான காப்பீடுகளை விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்

  • Rs.1,575.00

    அள்ள அள்ள பணம் 7 – தங்கம்

    ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது? · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது? · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா? · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா? தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது. வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்

  • Rs.1,190.00

    அள்ள அள்ளப் பணம் 6 மியூச்சுவல் ஃபண்ட்

    எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனைவகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல். வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது

  • Rs.1,225.00

    அள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்

    நீண்டகால முதலீடுகளைச் சரியாகச் செய்து நிறைவான செல்வத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு வழிகாட்டுகிறது இந்தப் புத்தகம்

  • Rs.1,188.00

    அள்ள அள்ளப் பணம் 3 – பங்குச் சந்தை ஃபியூச்சர்ஸ் ஆப்ஷன்ஸ்

    பனிமலையில் அதிவேகமாகச் சுறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானதுஇந்த ஃபியூச்சர்ஸ் ( F) & ஆப்ஷன்ஸ் (O). விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராததிருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு.அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும்வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும்அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

  • Rs.1,650.00

    அள்ள அள்ளப் பணம் 2 – பங்குச்சந்தை அனாலிசிஸ்

    எந்தப் பங்கை வாங்கவேண்டும், எதை வாங்கக் கூடாது ( Fundamental Analysis ).எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும் ( Technical Analysis ).பொருளாதாரம், Macro-economics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களைஎளிய உதாரணங்களுடன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறார்பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்

  • Rs.1,925.00

    அள்ள அள்ளப் பணம் பங்குசந்தை அடிப்படைகள்

    பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்

  • Rs.925.00

    உன்னை அறிந்தால்: இட்லியாக இருங்கள் 3

    எல்லோருக்கும் வெற்றிபெற விருப்பம் இருக்கும். புகழோடு திகழ ஆசை இருக்கும். மகிழ்ச்சியாக வாழ ஏக்கம் இருக்கும். ஆனால் இவையெல்லாம் கனவாகவே பலருக்கும் முடிந்துவிடுகிறது. திறமை இருந்தும் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை. சிந்தனைகள் கூர்மையாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அசாத்தியமான கனவுகள் இருந்தும் சராசரி வாழ்க்கைதான் கிடைக்கிறது. என்ன செய்தும் வாழ்வின் பாதையை, சிந்தனையின் போக்கை மாற்றமுடியவில்லை. என்ன செய்யலாம்? அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது இந்தப் புத்தகம்.

    சொந்த அனுபவங்கள், சிந்திக்கத் தூண்டும் குட்டிக் கதைகள், நடைமுறை உதாரணங்கள் எனப் பல்வேறு வாதங்களுடன் வெற்றிக்கான சூத்திரங்களை எளிய மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன்.வெற்றியைத் தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் நின்று, கவனித்து, உயர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நூல் இது

  • Rs.1,400.00

    No. 1 சேல்ஸ்மேன்

     

    பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன். நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார். டார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும். அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது

Main Menu

Open chat
வணக்கம்... 🙏
அகழி புத்தகாலயம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 😊