-
Rs.2,100.00
ஒட்டிச உலகில் நானும் /ootisa ulakil naanum
கால்களில் சக்கரங்களைப் பூட்டிக்கொண்டு, கணிகளில் எண்ணெய்யை விட்டுக்கொண்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு என்று எப்படிச்சொன்னாலும் தகும் மைதிலி என்ற தாயின் ஒவ்வொரு நாட்களின் நகர்வும். புத்தகத்தை வாசிக்குந்தோறும் மைதிலிக்கு எழுதவும் நேரம் அமைந்ததா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஓட்டிச உலகம் பெரிதெனினும் ஓட்டிசம் தம்மவர்களைப் பாதிக்காதவரை அதை அறிபவர்கள் குறைவு. அறிந்தவர்களும் அனுபவங்களைக் கொண்டவர்களும் இருக்க நிற்க நேரமின்றி ஒட்டிசச் சிறுவர்களோடே ஓடிக்கொண்டிருப்பதால் ஆற அமர இருந்து அனுபவங்களை எழுதுவதில்லை. இங்கே மைதிலி அவர்கள் தன்னனுபவங்களை தனது கணவர் றெஜினோல்ட் மற்றும் மகன்கள் றினோஷ், அனோஷ் ஆகியோரது உணர்வுகளையும் கலந்தெழுதி அருமையான புத்தகமாகதி தந்திருக்கிறார். இதுதான் வழி எனத் தெரியாத தத்தளிக்கும் பயணத்தில் தான் உணர்ந்த வேதனைகளையும் சாதனைகளையும் பதிவு செய்திருப்பது ஓட்டிசக் குழந்தையைப் பெற்று பராமரிக்க வழிதெரியாமல் தடுமாறும் பெற்றோருக்கு வழங்கியிருக்கும் அருமையான துடுப்பு. அது மட்டுமல்ல மக்களுக்கு ஓட்டிசம்/தீரனியம் பற்றிய புரிதலைத் தரக்கூடிய நல்லதொரு புத்தகமுமாகும். முக்கியமான இப் பதிவை ஒட்டிச உலகுக்குத் தந்து இம்மண்ணின் படைப்பாக எங்கட புத்தகங்கள் ஊடாக வெளியிடுகிறார். துடிப்புமிக்க தாயாக தன் ஆற்றலையும் புரிதலையும் சமூகத்தின் நலனுக்காகப் பகிர்ந்திருக்கும் மைதிலியின் வெற்றிப்படிகளில் இப்புத்தகத்தின் வரவும் ஒன்றாகும். அதேநேரம் தமிழில் ஒட்டிசம் பற்றிப்பேசும் ஒரு தாயின் மிகச்சிறந்த குரலாகவும் ஒலிக்கிறது
