Description
ஏழு வள்ளல்களிலும் தலைசிறந்தவன் பாரிவேள், இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில் வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களில் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள். கபிலருடைய பாட்டுக்களால்தான் பாரி இன்றும் வாழ்கிறான். அவனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் புறநானூற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப்பாடல் களும் உதவியாக இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறு பெரும்பாலும் சங்கநூற் செய்யுட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்றது. கற்பனையினால் நிகழ்ச்சிகளை விரித்து, உரையாடலைக் கூட்டி, வரலாற்றைத் தொடர்புடையதாக்கி இருக்கிறேன். பாரியின் பண்புகளையும் கபிலருடைய உணர்ச்சிகளையும் படிப்பவர்கள் உள்ளத்தில் பதியச் செய்யவேண்டுமென்பது என் ஆசை.
You May Also Like
Sold Out
stoayik sinthanaikal
Rs. 0.00
Sold Out
பின் தொடரும் பிரம்பம்
Rs. 700.00
Sold Out
velvet kuttrangal
Rs. 0.00
Sold Out
ரயில் நிலையங்களின் தோழமை
Rs. 0.00