Agazli Books
Agazli Books அகழி புத்தகாலயம்
Kannai nambaathe | thalai ilaatha silai Low Stock

கண்ணை நம்பாதே | தலை இல்லாத சிலை

Kannai nambaathe | thalai ilaatha silai

by ராஜேஷ் குமார் / Rajesh kumar


Rs. 1,518.00
SKUAGB0633
LanguageTamil
Pages136
Weight180 g
Description
கண்ணை நம்பாதே குடிபோதையில் காரை ஓட்டி செல்லும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் ஒரு பிரச்சனையில் சிக்குகிறான் அதில் பொய் வழக்கு புனைந்து போலீஸ் அதிகாரி ஒருவர். ஒரு அப்பாவியை அவனுக்கே தெரியாமல் அவனை பலிகடா ஆக்குகிறார். ஒரு கட்டத்தில் அவனுக்கு உண்மை தெரிகிறது அதற்குள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து பெரும் விபரீதமாக மாறுகிறது. தன் கண்ணைக்கூட நம்பக்கூடாது என்றிருந்தவனுக்கு யாரையும் நம்பக்கூடாது எனத் தெரியவில்லை. பதறவைக்கும் பரபர த்ரில்லர். தலை இல்லாத சிலை ஒருபக்கம், பழம்பெரும் கோயில்களிலிருந்து அரும்பெரும் சிலைகளைக் கடத்தும் அரசியல்வாதிகள் தலை இல்லாத சிலை என்னும் 100 டன் எடையுள்ள சிற்பத்தை கடத்த முயற்சிக்கிறார்கள் இன்னொரு பக்கம், ஒரு பெண் தன் தோழியின் காதலுக்கு உதவ செல்கிறாள் அங்கு ஒரு பிரச்னையில் சிக்குகிறான் அதை எப்படி எதிர்க்கொள்கிறான்? எப்படி மீன்கிறான்? இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் விறுவிறுப்பான சிலைக்கடத்தலை பின்னணியாக கொண்ட கதை. நான்கு தலைமுறை வாசகர்களின் அன்புக்குரிய எழுத்தாளரும் குற்றப் புதினங்களின் மன்னர் என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய நாவல்கள் மூலம் ஈர்த்து, வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் அச்சிதழ்கள், வாயிலாக இவருடைய படைப்புகள் வெளியாகி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் விரும்பிப் படிக்க காரணம் இவருடைய நாவல்களில் அறிவியலும், குற்றவியலும் ஒன்றாக சங்கமித்து சம்பலங்கள் மின்னல் வேகத்தில் நகர்வதுதான். இப்போது இவரது படைப்புகள் காலத்தை வென்று மின்புத்தகங்களாகவும், ஒலிப்புத்தகங்களாகவும் வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றன. சுடந்த 50 ஆண்டுகளாக இவர் 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் அதுதவிர, அறிவியல் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்,சமூக மற்றும் ஆன்மிக புதினங்களையும், 'என்னை நான் சந்தித்தேன் என்கிற பெயரில் தன் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுயசரிதமாகவும் எழுதியுள்ளார். இவரது சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்து உள்ளது அரசின் கலைக்கான உயரிய விருதான கலைமகளி விருது 2010ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.